Wednesday 8th of May 2024 01:49:37 PM GMT

LANGUAGE - TAMIL
.
யாழில் 21,000 பேர் உட்பட 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு இலட்சம் பேர் இதுவரை கொவிட் தடுப்பூசி பெறவில்லை!

யாழில் 21,000 பேர் உட்பட 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு இலட்சம் பேர் இதுவரை கொவிட் தடுப்பூசி பெறவில்லை!


யாழ். மாவட்டத்தில் 21 ஆயிரம் பேர் உட்பட 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர், இதுவரை கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கள உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

தடுப்பூசியேற்றும் நடவடிக்கை தொடர்பில் பரவும் பொய்யான விடயங்களை நம்பி, சிலர் கொவிட் தடுப்பூசியை நிராகரிப்பதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதுவரை தடுப்பூசி பெறாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் அதிகளவானோர் யாழ். மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட 21,000 இற்கும் மேற்பட்டவர்கள் இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொள்ளவில்லை.

அத்துடன், 60 வயதுக்கு மேற்பட்ட கொழும்பு மாவட்டத்தில் 3,900 பேரும் கண்டி மாவட்டத்தில் 7,000 பேரும் இதுவரை கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கொழும்பு, யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE